siruppiddy

செவ்வாய், 22 மார்ச், 2016

திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிகனடா முன்வந்துள்ளது

இலங்கையில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.
இலங்கையின் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்றத்தில் சந்தித்த
 கனேடியத் தூதுவர் ஷல்லி வைற்றிங் அம்மையார், இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
திரவ எரிவாயு மின் உற்பத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், ஏனைய தேவையான வசதிகளையும் கனடா வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக கவனத்தை இலங்கை பெற்றிருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளை பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பாகவும், கனேடியத் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை