siruppiddy

புதன், 2 மார்ச், 2016

ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அட்டகாசங்கள்!!!

முல்லைத்தீவி,தேவிபுரம் ஆ பகுதியில் அமைந்துள்ள அ,த,க,பாடசாலையில் மாணவர்கள் மீது ஆசிரியர்களின் அட்டகாசங்கள்!!!
இன்றும் வளமைபோலவே மாணவர்கள் அப் பாடசாலைக்கு கல்வி கற்க சென்றிருந்தனர் அங்கு அவர்கள் சென்ற துவிச்சக்கரவண்டிகளை ஓரமாக மாணவர்கள் விடவில்லையென கூறி குறித்த மாணவர்களின் துவிச்சக்கரவண்டிகளுக்கு காற்றைக் களட்டி விட்டதுடன் வால்க்கட்டைகளை ஆசிரியர்கள் வேலிக்கு வெளியால் வீசியதுடன் துவிச்சக்கரவண்டிகளை பாடசாலைக்கு பின்புறமாக மறைத்து
 வைத்துள்ளனர்
குறித்த மாணவர்கள் தங்கள் துவிச்சக்கரவண்டிகளுக்கு நிகழ்ந்த பரிதாப நிலையை கண்டு அதிற்சி அடைந்ததுடன் மிகுந்த வேதனையும் அடைந்தனர் தங்கள் வண்டிகளை உறுட்டி சென்ற மாணவர்கள் முன் வீதிக்கு ஓராமாக அமைந்துள்ள துவிச்சக்கரவண்டி திருத்தினரின் உதைவியை நாடிய போது,அவர் கூறிய விடையத்தை இங்கே தருகின்றோம்-என்னிடம் உங்கள் 33 வண்டிகளுக்கும் வால்க்கட்டைக்கு எங்கே போவது எனச்சொல்லி கைவிரித்துள்ளார்
ஆசிரியர்களின் செயலால் மாணவர்கள் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை தங்கள் வண்டிகளை கொழுத்தும் வெய்யிலில் தள்ளிச்சென்று வீடு சேர்த்தனர்
இது போன்ற ஆசிரியர்களின் நயவஞ்சக செயல்கள் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தொடச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை