siruppiddy

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஒரே தண்டவாளத்தில் நேர் எதிரே இரு ரயில்கள் பயணித்தன!!!

காலி கிங்தோட்டை பகுதியில் இரு புகையிரதங்கள்  ஒரே பாதையில் நேர் எதிரே பயணித்த நிலையில் ஏற்படவிருந்த  அனர்த்தம் மயிரிழையில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த  சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன் இது தொடர்பில் கண்டி - மாத்தறை புகையிரத்த்தின் சாரதி, துணைச் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி - மாத்தறை புகையிரதம், சமிக்ஞையை மீறி செயற்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின யணித்துக்கொண்டிருந்த அதே பாதையில் கண்டியிலிருந்து மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த புகையிரத்த்திற்கு சமிஞ்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகையிரத சாரதிகளின் திறமையினால் இடம்பெறவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை