siruppiddy

திங்கள், 6 ஜூன், 2016

இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகும் : மனோ உறுதி!

யுத்தத்தால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும், இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என அமைச்சர் மனோ கணேசன் 
தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், விரைவில் அவை நிறைவுபெற்று மீள்குடியேற்றம் பூர்த்தியாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் தொடர்பான விபரங்கள், கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ள நிலையில், அன்றைய தினம் மேலும் காணிகள் விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை