siruppiddy

ஞாயிறு, 4 மே, 2014

புகையிரதத்திலிருந்து கழன்று தனியாக பயணித்த**

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து கழன்ற இரண்டு பெட்டிகள் சுமார் 300 மீற்றர் வரையில் தனியாகப் பயணித்தாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயில் பெட்டிகள் இருந்த பகுதியை நோக்கி மீண்டும் பயணித்த யாழ்.தேவி, அவ்விரு பெட்டிகளையும் இணைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் எவருக்கும் சேதமேற்படவில்லை என புகையிரதநிலைய அதிகாரிகள் தெரிவித்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை