siruppiddy

வெள்ளி, 27 நவம்பர், 2015

தீபம் ஏற்றிய மூதாட்டிக்கு யமனாக அமைந்த கிணறு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கிணற்றடியில் விளக்கிட சென்ற மூதாட்டி ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
மன்னார் பண்ணை நாச்சுமார் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஜெகநாதன் ராமை ரத்தினம் (67 வயது) மூதாட்டியே இவ்வாறு 
மரணமடைந்துள்ளார்.
இவர் கிணற்றில் விழுந்ததும் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையை தொடர்ந்து சடலம் இன்று நண்பகல் உறவினரிடத்தில் கையளிக்கப்பட்டது.
கணவனும் மனைவியும் இவ்வீட்டியில் தனியாக வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பித்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை