siruppiddy

சனி, 31 மே, 2014

அந்தியேட்டி கிரிகை அழைப்பிதழ் அமரர் திரு பாலசிங்கம் திலகவதி

தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
                                                அமரர் :- பாலசிங்கம் திலகவதி
அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு திரு பாலசிங்கம் திலகவதி அவர்களின் அந்தியேட்டி கீரிமலை வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் எதிர்வரும்.03.06.2014 .செவ்வாய்கிழமை  கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் 05.06..2014  வியாழக்கிழமை  இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் அனைவரும் வருகைதந்து அன்னாரின் ஆத்மாசாந்திப்பிரத்தனயிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நன்றி இங்கனம்..குடும்பத்தினர்
 
 

வெள்ளி, 23 மே, 2014

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.

இன்று 23-05-2014 -33வது வருட திருமண நாள் காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்      சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா  (தேவன்).தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும்இவர்களுடன்இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்
 உறவு இணையங்களும் ,இறை அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

திங்கள், 12 மே, 2014

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள்

பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 முதல் 30 லட்ச ரூபா வரையில் அறவீடு செய்து நேபாளத்தின் ஊடாக ஐரோப்பிய, ஸ்கண்டினேவிய நாடுகளுக்கு நபர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் வர்த்தகம் தொடர்பிலான தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு பாரியளவில் பணத்தை செலுத்தி ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேனவிய நாடுகளுக்கு சென்று அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டு நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
இவ்வாறான சிலரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
போரின் பின்னர் பலர் ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையில் போலி ஆவணங்களுடன் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



ஞாயிறு, 4 மே, 2014

புகையிரதத்திலிருந்து கழன்று தனியாக பயணித்த**

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து கழன்ற இரண்டு பெட்டிகள் சுமார் 300 மீற்றர் வரையில் தனியாகப் பயணித்தாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயில் பெட்டிகள் இருந்த பகுதியை நோக்கி மீண்டும் பயணித்த யாழ்.தேவி, அவ்விரு பெட்டிகளையும் இணைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் எவருக்கும் சேதமேற்படவில்லை என புகையிரதநிலைய அதிகாரிகள் தெரிவித்தினர்.

நவற்கிரி காலநிலை