siruppiddy

வியாழன், 26 டிசம்பர், 2013

மிளிர்ந்த மெட்ரோ ரயில் வண்ண பரிசு காகித்தால்

  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரிஸில் மெட்ரோ ரயில் விதவித வண்ண பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு உலா வந்தது.

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் லைன் 8-ல் வந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் தரையிலிருந்து கூரைவரை பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு வந்தது.
இதனுடைய புகைப்படம் டுவிட்டர் தளத்தில் “ஆபரேஷன் கிறிஸ்துமஸ்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இவ்வலங்காரம் செய்ததற்கு அடிப்படை நோக்கம் இம்மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் முகத்தில் புன்முறுவலை கொண்டு வருவதும், அவர்களது நகைச்சுவை உணர்வை தூண்டி மகிழ்ச்சியடைய செய்வதும் ஆகும்.

ஆனால் இம்மெட்ரோ ரயிலை அலங்காரத்துடன் பயணிக்க அனுமதிக்காமல் அலங்கார காகித தாள்களை களைந்துவிட்டு, மெட்ரோ ரயிலை ஓட்டி செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை