யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.
இன்று காலை ஓமந்தை ரயில் நிலையத்திலிந்து புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.
யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும்.
மேலும் 15ஆம் திகதி முதல் தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி வரை யாழ் தேவி உட்பட 3 ரயில்கள் பயணிக்கவுள்ளன.
அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் வடக்கு ரயில் போக்குவரத்து காங்கேசன்துறை வரை நடத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக