siruppiddy

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பாலஸ்தீனர்! பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த,,

 
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக் செய்துள்ளார்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார். அதாவது பேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை பேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக பேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான கலீல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com) இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன். அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த பக்(bug) மூலம் ஒரு பேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall) எழுத முடிகிறது. நான் சாரா. குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை